செய்திகள் :

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு; தவெக மாவட்டச் செயலாளர் கைது; போலீஸார் விசாரணை!

post image

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மேற்கொண்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தைப் பொறுத்தவரை ஒருபக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையும், இன்னொருபக்கம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் ஆணையத்தின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

கரூர் சோகம்
கரூர் சோகம்

மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக பா.ஜ.க-வைச் சேர்ந்த சகாயம், த.வெ.க-வைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் ஆகிய மூன்று பேரை போலீஸ் கைதுசெய்தது.

இந்த நிலையில், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் போலீஸாரால் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

விழுப்புரம்: `கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியும், போலீஸும்தான் காரணம்!’ – தவெக நிர்வாகி தற்கொலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத... மேலும் பார்க்க

"ஆளாக்கிவிட்ட தந்தையை கொச்சைப்படுத்துபவரைப் பொருட்படுத்த வேண்டாம்" - அன்புமணி மீது அன்பில் அட்டாக்

கரூரில் இரண்டு நாள்களுக்கு முன்பு (செப்டம்பர் 27), தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயண பிரசாரத்தில், எதிர்பாராதவிதமாக 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.100... மேலும் பார்க்க

”தவெக நிகழ்வின் காலதாமதமே உயிர்பலிக்கு காரணம்; காவல்துறை மீது குற்றம் சுமத்துவது தவறானது”- அப்பாவு

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, “கரூரில் த.வெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீ... மேலும் பார்க்க

`கட்டபொம்மனுக்கு துரோகம் இழைப்பு' - எட்டயபுரம் மன்னர் குறித்து 10-ம் வகுப்பு பாடநூலில் தவறான தகவலா?!

தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் எ... மேலும் பார்க்க

கரூர்: பவர் கட், கல்வீச்சு, மர்ம நபர்கள் தாக்குதல் - இதெல்லாம் நடந்ததா? உண்மை என்ன?

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அசம்பாவிதம் நடந்ததற்கு சதிச் செயல் காரணமா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் நடக்கிறது. இந்த விவகாரத்த... மேலும் பார்க்க