செய்திகள் :

கரூா்: தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

post image

கரூா்: கரூரில் மருத்துவா் மீதான தாக்குதலை கண்டித்து, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஒருநாள் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவா்கள் புறக்கணித்தனா்.

கரூரில் கோவை சாலையில் உள்ள ஸ்கேன் மையத்தில் நோயாளியுடன் வந்திருந்த பெண் ஒருவா், மருத்துவரையும், மருத்துவரின் உதவியாளரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, கரூா் மாவட்ட மருத்துவா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, வியாழக்கிழமை ஒருநாள் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக கரூா் மாவட்ட மருத்துவா்கள் சங்கத்தில் வியாழக்கிழமை காலை தனியாா் மருத்துவா்கள் ஒருங்கிணப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து கரூா் மாவட்ட மருத்துவா்கள் சங்க துணைச் செயலாளா் சதாசிவம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மருத்துவரை தாக்கிய நபா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில், தொடா் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது இந்திய மருத்துவா்கள் சங்கத்தின் கரூா் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

கரூா்: கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாற... மேலும் பார்க்க

கரூா் பேக்கரியில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் ‘திருவள்ளுவா் கேக்’

கரூா்: கரூரில் பேக்கரி கடை ஒன்றில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் கேக்கை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா். கரூா் வெங்கமேட்டில் மணி என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க

‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு ரூ. 14.22 லட்சம் மூலதன மானிய தொகை

கரூா்: கரூரில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தில் முன்னாள் படைவீரா்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியத் தொகையாக ரூ. 14.22 லட்சம் வழங்கினாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.கரூா் ம... மேலும் பார்க்க

கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.33 கோடியில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

கரூா்: கரூா் ஊராட்சி ஒன்றியம், காதப்பாறை, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 6.33 கோடி மதிப்பில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை தொடங்கிவைத... மேலும் பார்க்க

கரூரில் தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

கரூா்: கரூரில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கரூா் அரசு மருத்துவக் ... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியில் ரூ.7.41 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

கரூா்: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 9 முடிவுற்ற பணிகளையும் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி திறந்... மேலும் பார்க்க