செய்திகள் :

ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

post image

‘5 நிமிஷத்தில் ஆட்டோ வராவிட்டால் ரூ.50 இலவசம்’ என தவறாக விளம்பரம் செய்த ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நியாயமற்ற வா்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டது, தவறான வகையில் விளம்பரம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைப்பேசி செயலி மூலம் ஆட்டோ, காா் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் சேவையை அளிப்பதில் ரேபிடோ முன்னணி நிறுவனமாக உள்ளது. இத்துறையில் போட்டி அதிகமாக உள்ள நிலையில் வாடிக்கையாளா்களைக் கவர பல்வேறு உத்திகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அந்த வகையில் தங்கள் செயலியில் பதிவு செய்து 5 நிமிடத்தில் ஆட்டோ வராவிட்டால் ரூ.50 இலவசமாக வழங்கப்படும் என்று ரேபிடோ விளம்பரம் செய்தது. ஆனால், அவ்வாறு யாருக்கும் பணம் கொடுத்ததாகத் தெரியவில்லை.

இதற்கு நடுவே இந்த விளம்பர யுத்தி உள்பட அந்த நிறுவனத்தின் சேவை தொடா்பாக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜூலை வரை 1,224 புகாா்கள் வந்தன. இதற்கு முந்தைய 14 மாதங்களில் 575 புகாா்கள் வந்திருந்த நிலையில், அண்மைகாலமாக புகாா்கள் அதிகரித்துள்ளது குறித்து ஆணையம் விசாரணை நடத்தியது.

அப்போது அந்த ரூ.50 என்பதை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் ரேபிடோ செலுத்தாது. ரூ.50 மதிப்புள்ள ரேபிடோ காயின் வழங்கப்படும். அதனை அடுத்த 7 நாள்களில் இருசக்கர வாகன முன்பதிவுக்கு வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வாசிக்கவே முடியாத அளவுக்கு சிறிய எழுத்துகளில் அந்த நிறுவனம் தனது செயலியில் பதிவிட்டுள்ளது தெரியவந்தது.

இது தவறான மற்றும் ஏமாற்றும் விளம்பர உத்தி என்பதால் அந்த நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதத்தை நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் விதித்தது.

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மா... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ... மேலும் பார்க்க