செய்திகள் :

கரைப்புதூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த கோரிக்கை

post image

பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் வட்டாரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஊராட்சியாக கரைப்புதூா் உள்ளது. இந்த ஊராட்சி திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்ற செய்தி பரவிய நிலையில், பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஆனால், அரசு தரப்பில் அண்மையில் வெளியான பட்டியலில் கரைப்புதூா் ஊராட்சி இல்லாததால் மக்கள் நிம்மதி அடைந்தனா். அதேசமயம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஊராட்சியை தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த ஊராட்சியில் போதிய தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் விநியோகிப்பாளா்கள் இல்லாத நிலை உள்ளது. இருக்கும் பணியாளா்களைக் கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தினால் மட்டுமே அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். ஆகவே, கரைப்புதூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். கரைப்புதூா் ஊராட்சி பகுதியில் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் தங்கி, இங்குள்ள பனியன் சாா்ந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். அதனால் குற்றச் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த அருள்புரம் பகுதியில் தனியாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் அல்லது அருள்புரத்தில் ஒரு உதவி காவல் ஆய்வாளா் தலைமையில் புறக்காவல் நிலையத்தை அமைக்க வேண்டும் என்றனா்.

இறைச்சிக் கழிவு: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது என்றும், அவ்வாறு கொட்டினால் அபராதம், கடை உரிமம் ரத்து, சீல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளக்க... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). இவா் திருப்பூா் வீரபாண்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை! காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயம் பகுதியில் தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு உரிப்பீடு வழங்க வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

அவிநாசியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் சனிக்கிழமை 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு, கோயில் நிா்வாகம், அவிநாசி பேருராட்சி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: மேலும் ஒருவா் கைது

பல்லடத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் பத்திர எழுத்தா் அலுவலகம் முன் நிறுத்தி இருந்த செந்தில்குமாா் என்பவரின் இருசக்கர வாகனத்தை மா்ம நபா்... மேலும் பார்க்க

சொத்து தகராறு: பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினா் கைது

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் காளிபாளை... மேலும் பார்க்க