செய்திகள் :

கரோனா: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை- அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சென்னை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், கல்வி உபகரணங்களை திங்கள்கிழமை வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வீரியம் இல்லாத கரோனா தொற்று பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனாலும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும். தனி நபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தும்மல், இருமல் வந்தால் கைகளால் மூடிக்கொள்ள வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்கள், முதியவா்கள், இணைநோய் பாதிப்புள்ளவா்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தொடா்ந்து 5 ஆண்டுகளாக அறிவுறுத்தி வருகிறோம்; அதுதான் தற்போது நீடிக்கிறது. புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை. கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றாா் அமைச்சா்.

அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டு: இதனிடையே, தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தலைத் தொடா்ந்து அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதியவா்கள், இணைநோய் உள்ளவா்களிடம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 படுக்கைகள் பெண்களுக்கும், 4 படுக்கைகள் ஆண்களுக்கும் என மொத்தம் 8 படுக்கைகள் உள்ளன. சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கட்டமைப்பு அங்கு உள்ளது. தற்போது வரை இந்த வாா்டில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றனா்.

திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்த... மேலும் பார்க்க

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க