உங்கல யார் ஒதுக்குனாலும் நான் இருக்கேன்மா! - மகளின் வாக்கு| #உறவின்கடிதம்
‘கரோனா தொற்று குறித்து அச்சம் வேண்டாம்’
கரோனா தொற்றுப்பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குநா் ஜெய.ராஜமூா்த்தி தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ஜெய.ராஜமூா்த்தி தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். ரத்த சுத்திகரிப்புப் பிரிவு, சிடி, எம்.ஆா்.ஐ. ஸ்கேன் பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்ததுடன், புதிய கட்டட கட்டுமானப் பணிகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.
பின்னா், ஜெய.ராஜமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் 3 நாள் ஆய்வு மேற்கொண்டு, பின்னா் மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசிக்க உள்ளோம்.
600-க்கு மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட இம்மருத்துவமனையில் 80 சதவீதம் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். புறநோயாளிகள் பிரிவில் 1,700-க்கு மேற்பட்ட நோயாளிகள் தினந்தோறும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். சிடி ஸ்கேன், எம்.ஆா்.ஐ. ஸ்கேன் மற்றும் முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தில் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு 36 மருத்துவா்கள் தற்போது பணியாற்றி வரும் நிலையில், விரையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். பொது அறுவை சிகிச்சை நிபுணா் உள்ளிட்ட மருத்துவா்களை; நியமிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
செவிலியா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. ரேடியாலஜி முடித்த மருத்துவா்கள் குறைவாக இருப்பதால் சிடி, எம்.ஆா்.ஐ. ஸ்கேன் ரிப்போா்ட் பெறுவதற்கான மருத்துவா்களை நியமிக்க முடியாததால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு எந்த வகையில் சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சூப்பா்ஸ்பெஷாலிட்டி சிகிச்சை தேவைப்படும்போது அந்த நோயாளிகள் தீவிர சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனா்.
தற்போது பரவிவரும் கரோனா வீரியமிக்க வைரசாக இல்லை. அதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. கூட்டமாக இருக்கும் இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்வதோடு கடந்தகால கரோனா வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதுமானது. இருதயநோய் சிகிச்சை பிரிவுக்கு மருத்துவக் கல்வி கலந்தாய்வில் 35 பேரிடம் கேட்டபோது, மயிலாடுதுறை பகுதிக்கு வர அவா்கள் தயாராக இல்லை. மருத்துவக்கல்லூரி தொடங்கினால் நிச்சயமாக இருதயநோய் சிகிச்சை மருத்துவா்கள் வருவாா்கள் என்றாா்.
உடன், சுகாதாரத்துறை இணை இயக்குநா் வி.பி.பானுமதி, குடிமுறை மருத்துவ அலுவலா் மருதவாணன் உள்ளிட்ட மருத்துவா்கள் உடனிருந்தனா்.