செய்திகள் :

கர்நாடக முதல்வர் மாற்றமா? விமர்சனத்துக்கு உள்ளான கார்கே பதில்!

post image

கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த விளக்கத்தை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கர்நாடகத்தின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை, கட்சி மேலிடம் கர்நாடகத்துக்கு அனுப்பியுள்ளது.

பெங்களூரில் மூன்று நாள்கள் முகாமிடும் சுர்ஜேவாலா, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களை தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கர்நாடக முதல்வர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “முதல்வரை மாற்றுவது தொடர்பான முடிவை எடுப்பது கட்சித் தலைமையின் கைகளில்தான் உள்ளது. கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. முடிவெடுக்கும் உரிமையை உயர்நிலைக் குழுவிடம் விட்டுவிட்டோம், நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. யாரும் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

பாஜக விமர்சனம்

மல்லிகார்ஜுன கார்கேவின் பதிலை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:

“காங்கிரஸ் தலைவராக இருந்தாலும், தான் உயர்நிலைக் குழுவில் இல்லை என்று கார்கே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். காங்கிரஸ் ஒரு குடும்பக் கட்சி.

ஒரு தலித் தலைவர், மன்மோகன் சிங்கைப் போல கட்டுப்படுத்தப்படுகிறார். மிகவும் வெட்கக் கேடானது.

ராகுல் காந்தி பிறந்த நாள் விளம்பததின்போதும், பிரியங்காவின் வேட்புமனுத் தாக்கலின்போதும் கார்கே மோசமாக அவமதிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : கர்நாடக முதல்வர் மாற்றமா? எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை!

BJP members are criticizing Congress leader Mallikarjun Kharge's explanation regarding the Karnataka Chief Minister issue.

3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்த ஐடி ஊழியர்! காரணம் என்ன?

மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார். முற்றிலும் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக மட்டுமே கதவைத் திறந... மேலும் பார்க்க

சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா! வீண் புரளிகளுக்குப் பதில்!

மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதை ஒன்றாகக் கைகோர்த்தபடி வெளிப்படுத்தியுள்ளனர்.கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? என்ற சந... மேலும் பார்க்க

புரி நெரிசல் பலி! முதல்வர், துணை முதல்வர் விலக வேண்டும்: காங்கிரஸ்

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்தனர்.... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும்... மேலும் பார்க்க

ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வு!

ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.நாளை முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 2,501 ஆக உயர்ந்த கரோனா!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கரோனா தொற்று நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், ஒருசில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி வருக... மேலும் பார்க்க