செய்திகள் :

கறைபடிந்த அமைச்சரவை: அண்ணாமலை குற்றச்சாட்டு

post image

கறைபடிந்த அமைச்சரவையை மக்கள் விரைவில் தோற்கடிப்பார்கள் எனப் பதிவிட்டு ’கெட் அவுட் ஸ்டாலின்’ டிரெண்டிங்கை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்துக்கான கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக தலைவர்களும், மாநில அரசுக்கு எதிராக பாஜக தலைவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றால் ’கோ பேக் மோடி’ என்பதற்கு பதிலாக ’கெட் அவுட் மோடி’ எனத் துரத்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, திமுக ஊடக அணியினர் ’கெட் அவுட் மோடி’ என்று இந்திய அளவில் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற டிரெண்டிங்கை தொடங்கி வைக்கவுள்ளதாக அறிவித்தார்.

இதையும் படிக்க : மொழிப் பிரச்னையில் தலைவா்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவோம்: அண்ணாமலை

இந்த நிலையில், காலை 6 மணிக்கு ‘கெட் அவுட் ஸ்டாலின்’ டிரெண்டிங்கை தொடங்கிவைத்த அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

“ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்துக்கும் தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான அரசு விரைவில் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை டிரெண்டிங்கை தொடங்கிவைத்து 3 மணிநேரமாகும் நிலையில், இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பதிவிடப்பட்டுள்ளது.

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க