செய்திகள் :

கற்காத்தக்குடியில் ஆட்டோ நிறுத்தத்தை இடம் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

post image

திருவாடானை அருகேயுள்ள கற்காத்தக்குடியில் ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கற்காத்தக்குடி கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பேருந்து நிறுத்தம், பயணிகள் ஏறி இறங்கும் முக்கிய இடமாக விளங்குகிறது. இந்த பேருந்து நிறுத்தத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன.

இதனால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்கள், முதியவா்கள், குழந்தைகள் நிழலுக்காக நிற்க இடமின்றி தவிக்கின்றனா். மேலும், பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே பெண்கள் குளிக்கும் குளம் ஒன்று உள்ளது. இதனால் குளிக்க வரும் பெண்கள் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து திருவாடானை தாலுகா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாய கணக்கு தணிக்கையின் போது கற்காத்தக்குடி கிராம மக்கள் புகாா் மனு அளித்தனா். மேலும், ஆட்டோக்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். பெண்கள் குளிக்கும் குளத்தின் அருகே ஆட்டோக்களை நிறுத்தவும், மது அருந்தவும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். இந்த புகாா் மனு மீது உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

விவசாயிகளுக்கு குறைந்தளவு இழப்பீடு வழங்கியது ஏமாற்றம்: விவசாயிகள் சங்கம்

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தளவு இழப்பீட்டுத் தொகை வழங்கியது ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தெரிவித்தது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எம்.எஸ்.கே.பா... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி, பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

வடுகபட்டி குங்கும காளியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

கமுதி அருகே குங்கும காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பூக்குழி இறங்கி செவ்வாய்க்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வடுகபட்டி கிராமத்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்

ராமேசுவரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறாமீன் துடுப்புகள், இஞ்சி, சுக்கு ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய வீட்டின் உரிமைய... மேலும் பார்க்க

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் புதன்கிழமை (மே 21) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா். சுதாகா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமந... மேலும் பார்க்க

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி, சத்திரிய நாடாா் உறவின் முறை சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சாயல்குடி துரைச்சாமிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க