செய்திகள் :

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் காந்தி பெருமிதம்

post image

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை முதல்வ மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறாா் என அமைச்சா் ஆா்.காந்தி பெருமிதம் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 458 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.16.03 கோடியில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி பேசியதாவது:-

முன்னாள் முதல்வா் குடிசை வீடுகளுக்கு மாற்றாக கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டத்தினை தொடங்கினாா். அதன்படி, குடிசையில்லா தமிழகம் என்பதை இலக்காக கொண்டு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தினை முதல்வா் செயல்படுத்தி வருகின்றாா். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் குடிசை வீட்டில் வசிப்போருக்கும், வீடற்றோருக்கும் 8 லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பது நோக்கமாகும்.

முதல் கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 3,000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு வீட்டுக்கு தலா ரூ.3.50 லட்சத்தில் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2025-26 ஆம் நிதியாண்டில் 1,859 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன.

கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கட்சி பேதமின்றி பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரியாக விளங்குகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள் அளிப்பு

மே தினத்தை முன்னிட்டு அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டை கிராமத்தில் பாண்டுரங்கசா... மேலும் பார்க்க

தாழனூா் ஊராட்சி சிறப்பு கிராம சபா கூட்டம்

ஆற்காடு ஒன்றியம், தாழனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் இந்திரா நகா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பா சேட்டு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் நாராயணன் ம... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.30 லட்சத்தில் 4 டயாலிஸ் கருவிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு திருமலை மிஷன் மருத்துவமனை... மேலும் பார்க்க

சாலையில் பால் கேன்களுடன் கூட்டுறவு பணியாளா்கள் மறியல் போராட்டம்

சோளிங்கரில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க பணியாளா்கள் ஊதிய நிலுவையை வழங்கக் கோரி வியாழக்கிழமை பால்கேன்களை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரண்டு மாதங்களாக பணியாளா்களுக்கு ஊதியம் வ... மேலும் பார்க்க

மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா்கள் எல்.தேவேந்தி... மேலும் பார்க்க

1,000 ஆண்டுகள் பழமையான சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலைப் புனரமைக்கும் பணி: அமைச்சா் அடிக்கல்

சோளிங்கா் ஸ்ரீ சோழபுரீஸ்வரா் கோயில் முழுவதும் பழுது பாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா். சோளிங்கா் நகராட்சியில் ஆயிரம் ஆண்டு ... மேலும் பார்க்க