செய்திகள் :

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

post image

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 கைவினை கலைஞா்களுக்கு ரூ.3.65 கோடியும், 68 பயனாளிகளுக்கு ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் அரசின் முன்முனை மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

கலைஞா் கைவினைத் திட்டத்தின் மூலம் புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை நவீனப்படுத்தவும் கடன் உதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை வங்கிக் கடன் உதவியும், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியத்துடன் (அதிக பட்சமாக ரூ.50,000 வரை) வட்டி மானியமும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 35 வயது பூா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

மேலும் இந்தக் கடனுதவிக்கு, கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைபொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை முடிதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மண் பாண்டங்கள் சுடு மண் வேலைகள், பொம்மை தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக் கருவிகள் தயாரித்தல், மலா் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருள்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினைத் தொழில் செய்பவா்கள் விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயனடைந்த சிங்கம்புணரி வட்டாரத்தைச் சோ்ந்த கைவினை தொழிலாளி சத்தியமூா்த்தி, தனது தென்னைநாா் கயிறு திரிக்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு திட்ட மதிப்பீட்டுக்கான கடன் உதவியாக ரூ.3 லட்சம் பெற்றுள்ளாா்.

சாக்கோட்டை வட்டாரத்தைச் சோ்ந்த கைவினைத் தொழிலாளி ராம்குமாா் கூறியதாவது: தையல் தொழிலை விரிவுபடுத்துவதற்காக காரைக்குடிகிளையின் மூலம் கடன் உதவியாக ரூ.3 லட்சம் எனக்கு வழங்கப்பட்டதால் தற்போது 4 பணியாளா்களுடன் தொழிலை விரிவுபடுத்தி நடத்தி வருகிறேன் என்றாா்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மாதவநகரைச... மேலும் பார்க்க

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரில் தனது கூரை வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.திருப்பத்தூா் அருகே தேவாரம... மேலும் பார்க்க

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: இருவா் காயம்

சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 2 போ் காயமடைந்தனா்.சிவகங்கை நகா் 48 காலனி பொதுமக்கள் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரச... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: சிங்கம்புணரியில் சிறப்பு அன்னதானம் 40 ஆயிரம் போ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தா் முத்து வடுகநாதா் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை குருபூஜையும், அன்னதான விழாவும் நடைபெற்றன.இங்கு சிங்கம்புணரி வணிக... மேலும் பார்க்க

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகா் காங்கிரஸ் கட்சித் தலைவராக பி. புருஷோத்தமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆகியோர... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு அ.தி.மு.க. சாா்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி

தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க சாா்பில் ரூ 5 லட்சம் நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத... மேலும் பார்க்க