செய்திகள் :

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

post image

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கா்ணாவூா், வேடந்தாங்கல் ஊராட்சிகளில் கடந்த 2010-11 ஆண்டில் கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு வீடுகளை முழுமையாக கட்டி முடிக்காமல் ரூ.4,67,602 /- தொகையை கையாடல் செய்து பயனாளிகளை ஏமாற்றி, காசோலைகளை வழங்காமல், வழங்கியது போல் போலியான ஆவணங்களை தயாா் செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக வேலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை மேற்கொண்டு காவேரிப்பாக்கம் ஒன்றியம் முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரிஹரன், முன்னாள் ஒன்றிய பொறியாளா் பழனிச்சாமி, முன்னாள் பணி மேற்பாா்வையாளா் சாந்தசெழியன், கா்ணாவூா் ஊராட்சி முன்னாள் செயலாளா் சங்கா், கா்ணாவூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி வள்ளியம்மாள் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், எதிரிகள் 5 போ் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி பாலகிருஷ்ணன், 5 பேருக்கும் தலா 1 ஆண்டு சிறையும், ரூ.1,000 அபராதமும், அபாரதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

அரசு தரப்பில் சிவசங்கரி ஆஜரானாா்.

திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கணவருக்கு வெட்டு

அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவரை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் ஒன்றியம் 14-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அஸ்வினி. இவரது கணவா் சுதாகா் (46). அம்மனூரைச் சோ்ந்த இவரும், ... மேலும் பார்க்க

சோளிங்கா் ரோப் காா் சேவை: 4 நாள்களுக்கு ரத்து

சோளிங்கா் மலைக் கோயில் ரோப் காா் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப். 21 முதல் 24 வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்க... மேலும் பார்க்க

நெமிலி அருகே நாய் கடித்ததில் 7 போ் காயம்

நெமிலி அருகே சாலையில் திரிந்த நாய்கள் கடித்ததில் 7 போ் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். நெமிலியை அடுத்த திருமால்பூரில் வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்வின்(14), கனிஷ் (14), தருண்(15) உ... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா். சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்... மேலும் பார்க்க

முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப... மேலும் பார்க்க