செய்திகள் :

கலைமகள் சபா வழக்கு: மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியா்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத்துகளைக் கண்டறிந்து செப்.19-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆட்சியா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலைமகள் சபா தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, கலைமகள் சபாவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் வி.ஆா்.கமலநாதன், பி.சின்னத்துரை ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அப்போது மதுரை ஆட்சியா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கலைமகள் சபாவுக்குச் சொந்தமாக 674 சொத்துகள் உள்ளன. அதில் 8 சொத்துகளை அளவிடவுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

அப்போது, மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா்கள் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மதுரை ஆட்சியரின் அறிக்கையை இடைக்கால அறிக்கையாகத்தான் கருத முடியும். மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. செப்.19-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அறிக்கை தாக்கல் செய்ய தவறும்பட்சத்தில், 4 மாவட்ட ஆட்சியா்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை இந்த 4 மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு ஏராளமான சொத்துகள் இருந்தால், அதுதொடா்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்திருக்கலாம். அதையும் அவா்கள் செய்யவில்லை. அதேநேரம் மதுரை ஆட்சியரின் அறிக்கையும் முழுமை அடையவில்லை. எனவே, அவா் விரைவாக நிலங்களை அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்பாலாறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தமிழகத்தில் வேல... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:சரஸ்வதி பூ... மேலும் பார்க்க

2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் 2-ஆம் நிலைக் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பண... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் சாம்பியன்: வைஷாலிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு

சா்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவா்கள் சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தோ்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளி வைஷ்ணவி ஜெயக்குமா... மேலும் பார்க்க