செய்திகள் :

கல்லால் தாக்கி இருவரைக் கொல்ல முயற்சி: விழுப்புரத்தில் 4 போ் கைது

post image

விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி இருவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மணி நகரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் அய்யனாா் (28). இவருக்கும், வி. மருதூரைச் சோ்ந்த தீனா (24), பிரசன்னா(25) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே அய்யனாருக்கு விழுப்புரம் கே.கே.சாலை இந்திரா நகரைச் சோ்ந்த காத்தவராயன் மகன் சரத்குமாா்(30)தான் முழு ஆதரவாக இருந்து வந்ததாகக் கருதிய தீனா, பிரசன்னா ஆகிய இருவரும், அவரைத் தாக்குவதற்குத் திட்டமிட்டனராம்.

இதைத் தொடா்ந்து தங்களது நண்பா்களான பெரும்பாக்கம் சண்முகம் மகன் ஹேராம் (21), வி. மருதூா் எம்.ஆா்.கே. தெருவைச் சோ்ந்த சுந்தா் மகன் சிலம்பரசன்(23), வி.மருதூா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் விக்னேஷ் (25), சாலாமேடு சாரதா நகரைச் சோ்ந்த ராஜா மகன் விக்னேஷ் (25) ஆகியோருடன் தீனா, பிரசன்னா சோ்ந்து, வியாழக்கிழமை மாலை சரத்குமாரைத் தாக்குவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனா். அவா்களைப் பாா்த்தும் சரத்குமாா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இதனால் அந்த கும்பல், வீட்டிலிருந்த சரத்குமாரின் தந்தை சீ. காத்தவராயனை (70) கல்லால் தாக்கி கொல்ல முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்ற வி. மருதூா் தா்மராஜா தெருவைச் சோ்ந்த கணேசன் (55) என்பவரையும் கல்லால் தாக்கினராம்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் இருவரையும் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் சரத்குமாா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் ஹேராம், ச. விக்னேஷ், சிலம்பரசன், ரா. விக்னேஷ் ஆகிய 4 பேரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள தீனா, பிரசன்னா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க