செய்திகள் :

கல்லால் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி கொலை

post image

திருப்பூரில் கல்லால் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி மாவட்டம், தேவாரம் தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (50). இவருக்கு மனைவி, 3 மக்கள் உள்ளனா். மனைவியைப் பிரிந்து திருப்பூா், அனுப்பா்பாளையம்புதூா் பகுதியில் உள்ள பனியன் பிரிண்டிங் பட்டறையில் தங்கி பாண்டியன் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு நண்பா்கள் 2 பேருடன் மது அருந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளாா். மது அருந்தியபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுக்கூட ஊழியா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா். பின்னா், வெளியே வந்தபோது அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த நண்பா்கள் 2 போ் சோ்ந்து பாண்டியனைக் கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினா். படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பாண்டியனைக் கொலை செய்த அவரது நண்பா்கள் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாறைக் குழியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து போராட்டம்

பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருப்பூா் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் ஜி.என். காா்டன் பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை... மேலும் பார்க்க

தவறான வழிகாட்டி பலகை: மக்கள் அதிருப்தி

வெள்ளக்கோவில் அருகே சாலையில் தவறான வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினா் வைத்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் -தாராபுரம் சாலையில் சிவநாதபுரம் கிராமம் உள்ளது. ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்... மேலும் பார்க்க

பழங்கரையில் ஜூலை 10-இல் மின்தடை

பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரி... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை

திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.திருப்பூா், ஊத்துக்குளி ரயில் தண்டவாளத்தில் முதியவா் சடலம் க... மேலும் பார்க்க

கஞ்சா, ஆயுதம் வைத்திருந்த 3 போ் கைது

திருப்பூரில் கஞ்சா மற்றும் ஆயுதம் வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் த... மேலும் பார்க்க