செய்திகள் :

கல்லூரி நட்பு எப்போதும் தொடர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை: பல்வேறு பணிகள் இருந்தாலும், இளம்தலைமுறை மாணவர்களை சந்திக்கும்போது எனர்ஜி வந்துவிடுகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவள விழாவில் பங்கேற்கு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் கல்வி பயிலும் வாய்ப்பினை ஜமால் முகமது கல்லூரி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

காந்தி வழி, அம்பேத்கர் வழி, அண்ணா வழி என மாணவர்களுக்கு பல வழிகள் உள்ளன. எனவே, மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் வழியில் ஒருபோதும் சென்றுவிடக் கூடாது என்று கூறினார்.

அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் ஜமால் முகமது கல்லூரியில் படித்தவர்கள்தான.

மாணவர்களுக்கு கல்விதான் நிலையான சொத்து. அதேவேளியல், சமூக அக்கறையும் தேவை. மாணவர்களிடம் அரசியல் பேசவில்லை. ஆனால், மாணவர்களுக்கு அரசியல் புரியவேண்டும் என்றுதான் கூறுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இனிஷியல் போட்டுக் கொள்ளலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு தந்தையும் அக்கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.கும்பகோணத்தில் பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சன்னநிதி ... மேலும் பார்க்க

நலத்திட்டங்களைப் பெறுவோர் தூதுவர்களாக வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

அரசு நலத்திட்டங்களைப் பெறும் மக்கள் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தர். நாமக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் முடிவற்ற திட்டப் பணிகளைத் தொ... மேலும் பார்க்க

நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு

பாரம்பரிய நெல் வகைகளை காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த நெல் ஜெயராமனின் சிலை திருத்துறைப்பூண்டியில் நிறுவப்படும் என்று திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவாரூர் ... மேலும் பார்க்க

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிஆர்பி தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலை ... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை உத்தரவு நிறுத்திவைப்பு!

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31 வரை நிறுத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத... மேலும் பார்க்க