செய்திகள் :

கர்நாடகத்தில் முதல்வர் பதவி காலியாக இல்லை: சித்தராமையா!

post image

கர்நாடகத்தில் முதல்வர் மாற்றம் குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அம்மாநிலத்தில் முதல்வர் பதவி காலியாக இல்லை, என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைநகர் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகத்தில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்பட்டு, அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவி உயரக்கூடும் என வெளியான தகவல்கள் பேசுப்பொருளாகின.

இதுகுறித்த, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், 5 ஆண்டுகளும் தானே முதல்வராகத் தொடரப்போவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

“முதல்வர் பதவி காலியாக உள்ளதா? நான் உங்கள் முன்புதானே இருக்கின்றேன். கர்நாடகத்தின் முதல்வர் நான்தான். இதைதான், டி.கே. சிவக்குமாரும் கூறினார். அதையே நானும் சொல்கின்றேன். இங்கு பதவி (முதல்வர்) காலியாக இல்லை” என அவர் பேசியுள்ளார்.

முன்னதாக, கர்நாடகத்தில் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று ஆதரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Putting an end to reports of a change in the Chief Ministerial post in Karnataka, Chief Minister Siddaramaiah has said that the post of Chief Minister is not vacant in the state.

இதையும் படிக்க: கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்!

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்: சுவிட்சா்லாந்து அனுமதி

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சா்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இத் தகவலை இந்தி... மேலும் பார்க்க

பிகாரில் தனித்துப் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இ... மேலும் பார்க்க