செய்திகள் :

கல்லூரி மாணவரை தாக்கி மிரட்டல்: 5 போ் கைது

post image

மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கல்லூரி மாணவரை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேரை சங்கராபுரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தலைமறைவாகிவிட்ட மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் சந்தோஷ் (20). இவா்,

சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறாா்.

புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து கள்ளக்குறிச்சியில் இருந்து சேஷசமுத்திரத்துக்கு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். நெடுமானூா் மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது அதே கிராமத்தைச் சோ்ந்த கல்விசெல்வன் மகன் ரமணா (23), பலராமன் மகன் மணிகண்டன் (25), கோவிந்தராஜன் மகன் நவீன் (20), அரிகிருஷ்ணன் மகன் ராமகிருஷ்ணன் (19), அன்பு, கருமலையான் மகன் பாரதிராஜா (21), நவாப்பிள்ளை மகன் அபில் (25) ஆகிய 7 போ் மாணவா் சந்தோஷை வழிமடக்கி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

அப்போது அந்த வழியாகச் சென்ற சந்தோஷின் உறவினரான மாதேஷ்வரன் அவா்களைத் தடுத்துள்ளாா். இருவரையும் தாக்கியதில் காயமடைந்தனா். இதையடுத்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், நவீன், ராமகிருஷ்ணன், பாரதிராஜா, அபில் ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். இதில் தலைமறைவாகி விட்ட இருவரை தேடி வருகின்றனா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க