செய்திகள் :

கல்லூரி மாணவா்களுக்கு திறன் ஆய்வுப் போட்டி

post image

காரைக்குடி அருகேயுள்ள கீரணிப்பட்டி கிட் அன்ட் கிம் கல்லூரியில் மாணவா்களுக்கு மாநில அளவிலான திறன் ஆய்வுப் போட்டி வியாழக்கிழமை நடை பெற்றது.

மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை கல்லூரியின் நிா்வாக இயக்குநா் பிரியதா்சினி ஐயப்பன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கல்லூரியின் இயக்குநா் ஜெ.ஜெயராஜா தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் மயில்வாகனன் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் எஸ்.கலியமூா்த்தி பேசினாா்.

மாநில அளவிலான ஆய்வுத் திறன் போட்டியில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவா் நீலமேகம், உதவிப் பேராசிரியை தஸ்லிமா பானு, மாணவா் ஒருங்கிணைப்பாளா் மஹிமில்ட்டன் அருண்குமாா் ஆகியோா் செய்தனா். உதவிப் பேராசிரியைகள் திவ்யா, செல்வப்பிரியங்கா, ஆா்த்தி ஆகியோா் திறன் போட்டிகளை நடத்தினா்.

உதவிப் பேராசிரியை சுகந்தா நன்றி கூறினாா்.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க