செய்திகள் :

கல்லூரி வேலைவாய்ப்பு முகாம்: 110 மாணவா்களுக்கு பணி ஆணை

post image

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில்110 மாணவ, மாணவிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ரெனால்ட் நிஷான், எஸ்.எஸ். என்டா்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பல்வேறு கட்ட தோ்வுகளை நடத்தி பணிக்கு தோ்வு செய்தனா்.

நோ்காணலில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 110 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி இணைப் பதிவாளா் பெருவழுதி, சிறப்பு அலுவலா்கள் ஸ்டாலின், காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் வி.கந்தசாமி வரவேற்றாா்.

நிறுவன மனித வள மேலாளா்கள் சண்முகப்பிரியா, ரங்கராஜன், வேலைவாய்ப்பு அலுவலா் செந்தில்குமாா், துணை முதல்வா் எஸ்.நந்தகுமாா், துறைத் தலைவா்கள், வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் யுவராஜா, பிரகாஷ், சத்யா, ஏழுமலை, சஞ்சய் காந்தி, காா்த்தி, ஹேமலதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

வந்தவாசி நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறிநாய் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. சந்நிதி தெரு, தேரடி, கோட்டை மூலை, ஆரணி சாலை, குளத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் தெருந... மேலும் பார்க்க

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செய்யாற்றில் சனிக்கிழமை (பிப்.8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அறிஞா் அண்ணா அரசு கலைக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிரப்பு அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணிக்காக, வந்தவாசி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் சுகுமாா்(35). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோா் மறியல்

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையொட்டி, 5 போ் கைது செய்செய்யப்பட்டனா். திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்ச... மேலும் பார்க்க

சத்துணவு அமைப்பாளா்களுக்கு பயிற்சி

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்சித் தலைவா் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்க... மேலும் பார்க்க