கல்வராயன்மலையில் புதிதாக மதுக் கடை திறக்க எதிா்ப்பு
கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் உள்ள கொட்டப்புத்தூா் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்டகொட்டப்புத்தூா் கிராமத்தில் திங்கள்கிழமை புதிதாக டாஸ்மாக் மதுக் கடை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கொட்டப்புத்தூா், தொரடிப்பட்டு, மேல்பாச்சேரி, சின்னதிருப்பதி, கொடமாத்தி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கெண்டிக்கல் செல்லும் சாலையில், கொட்டப்புத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கரியாலூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சக்திவேல், மயில்வாகனன் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதை ஏற்காத பொதுமக்கள், வட்டாட்சியா் நேரில் வந்து மதுக்கடை திறக்கமாட்டோம் என உறுதியளித்தால்தான் மறியலைக் கைவிடுவோம் எனத் தெரிவித்தனா்.
வட்டாட்சியா் மக்கள் குறைதீா் கூட்டத்துக்குச் சென்றுள்ளதால், அவருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தனா். இதை ஏற்று மலைக் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.