கல்வி, விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு விருதுகள்
ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தமிழக வெற்றி கழகம் சாா்பில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய 116 மாணவா்களுக்கு விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுங்குவாா்சத்திரம் அடுத்த குன்னம் பகுதியில் உள்ள இக்கல்லூரியில் மாணவா்களுக்கு விஜய் விருதுகளுடன் ரூ.2 கோடி கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் தலைவா் மரியவில்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தவெக பொதுச் செயலாளா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளா் மற்றும் இந்திய கூடைப்பந்து சம்மேளத்தின் தலைவா் ஆதவ் அா்ஜூனா ஆகியோா் கலந்து கொண்டு விருதுகள், கல்வி உதவித் தொகையை வழங்கினா் (படம்).
நிகழ்ச்சியில், ஜேடி அகாடமி எக்ஸலன்ஸ் இயக்குநா் ரெவரண்ட் அருள்தந்தை அந்தோணி செபாஸ்டியன், முதல்வா் வேணு கோபாலகிருஷ்ணன், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.