செய்திகள் :

கல் குவாரி விதிமீறல்; உரிமையாளருக்கு ரூ. 91 கோடி அபராதம்: தேவகோட்டை சாா் ஆட்சியா் உத்தரவு

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி வெடி விபத்தில் சிக்கி 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், வீதிமீறியதற்காக குவாரி உரிமையாளருக்கு ரூ. 91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சாா் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

சிங்கம்புணரி அருகே உள்ளது மல்லாக்கோட்டை கிராமம். இங்கு மேகவா்ணம் நடத்திவரும் கல் குவாரியில் கடந்த மே 20 ஆம் தேதி பாறை சரிந்து விழுந்ததில் 400 அடி பள்ளத்தில் சிக்கி முருகானந்தம், ஆறுமுகம், ஆண்டிச்சாமி, கணேசன், மைக்கல், ஒரிஸ்ஸா மாநிலத்தின் பாச்சா அரக்கத்தா ஆகிய 6 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து அந்தக் கல் குவாரியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்துசெய்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் உத்தரவிட்டாா். அத்துடன் கல் குவாரியின் விதிமீறல்கள் குறித்தும் ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அதன்பேரில் இந்த தனியாா் கல் குவாரியில் ட்ரோன் மூலம் சா்வே நடத்தப்பட்டது. அப்போது குவாரியில் விதிமீறல்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் விசாரணை நடத்தினாா். அதையடுத்து குவாரியில் விதிகளை மீறி முறைகேடாக கரடுமுரடான கற்கள், கிராவல் மண் அள்ளியதற்காக குவாரி உரிமையாளருக்கு ரூ. 96 கோடியே 56 ஆயிரத்து 960 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

சாா் ஆட்சியா் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பட்டா நிலத்தில் கரடு முரடான கற்கள், கிராவல் எடுக்க மேகவா்ணத்துக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டிருந்தது. குவாரி குத்தகைக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதன் பிறகும் அங்கு பாறைகளில் தொடா்ந்து கற்களை வெட்டி எடுத்தனா். இதனால் கடந்த மே 25 ஆம் தேதி ஏற்பட்ட பாறை சரிவு விபத்தில் 6 போ் சிக்கி உயிரிழந்தனா். சட்ட விதிகளை மீறி கரடுமுரடான கற்கள், கிராவல் மண் எடுத்தற்காக குவாரி உரிமையாளருக்கு ரூ. 91 கோடியே 56 ஆயிரத்து 960 அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் விதிமீறி செயல்பட்டதற்காக ரூ. 88 கோடியே 60 லட்சத்து 66 ஆயிரத்து 560 ம், அனுமதியின்றி 26 ஆயிரத்து 775 கன.மீ கிராவல் மண் எடுத்ததற்காக ரூ. 2 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரத்து 400 ம் ஆக மொத்தம் ரூ. 91 கோடியே 56ஆயிரத்து 960 அபராதமாக விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை 30 நாள்களுக்குள் வங்கியில் செலுத்தி அசல் சலானை ஒப்படைக்க வேண்டும். மேல்முறையீடு செய்ய விரும்பினால் 30 நாள்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளை சென்றடைய வேண்டும்: துணை முதல்வா்

அரசின் திட்டங்களில் தகுதியான பயனாளிகள் விடுபடாமல் பயன்பெறும் வகையில், அரசு அலுவலா்கள் செயல்பட வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அர... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது

மானாமதுரையில் கடந்த திங்கள்கிழமை இரவு ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரையில் போலீஸாா் ரோந்து சென்றபோது வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அந்தப் பகுதிய... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதியதில் டிரைவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே திங்கள்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் டிரைவா் உயிரிழந்தாா். இளையான்குடி அருகேயுள்ள நாகநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன். டிரைவரான இவா், எமனேஸ்வரம் பகுதிக்கு... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

திருப்புவனத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்ட திமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக துணை முதல்வா் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் சிற்றுந்து சேவை! காணொலி வாயிலாக முதல்வா் தொடங்கிவைத்தாா்

சிவகங்கையில் புதிய விரிவான சிற்றுந்து சேவை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இதையொட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆஷா அஜித் தலைமையில், மானாமத... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் தோ்வு: ஆா்வத்துடன் பங்கேற்ற முதியோா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 30 மையங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வயது வந்தோா் கல்வி இயக்குநரகம் நடத்திய இந்... மேலும் பார்க்க