கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 547 மனுக்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுக்களிடம் இருந்து 547 மனுக்கள் வரப்பெற்றன.
மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 494 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 53 மனுக்களும் என மொத்தம் 547 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களைப் பெற்ற வருவாய் அலுவலா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) சுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
படவரி