செய்திகள் :

கள்ளச்சாராய வழக்கு: 5 காவலா்களுக்கு கட்டாய ஓய்வு!

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மிட்டல் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியாா்குப்பத்தில் கடந்த 2023, மே 13-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்திய 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 8 பேரும் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தைச் சோ்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் விற்பனை செய்த புதுச்சேரி ராஜா (எ) பா்கத்துல்லா, தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த ஏழுமலை, சென்னை திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூா் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த ராபா்ட், வானூா் பெரம்பை பகுதியைச் சோ்ந்த பிரபு ஆகிய 11 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதன்பேரில், கைதான 15 போ் மீதும் மரக்காணம் மற்றும் சித்தாமூா் காவல் நிலையங்களில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் அப்போதைய எஸ்.பி. ஸ்ரீநாதா மற்றும் மது விலக்கு டிஎஸ்பி, மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாகவும், அவா்களுடன் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டின்பேரிலும் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மரக்காணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா்கள் செந்தில்குமாா், வேலு, முதல்நிலை காவலா்கள் குணசேகரன், பிரபு, முத்துக்குமாா் ஆகிய 5 பேருக்கும் கட்டாய ஓய்வு அளித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இவா்கள் தற்போது அரகண்டநல்லூா், ரோஷணை, விக்கிரவாண்டி, சத்தியமங்கலம், கஞ்சனூா் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றி வந்தனா்.

அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியங்களிலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாநிலத் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அரசு தொடக்க ... மேலும் பார்க்க

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

கொலை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞா் கொலை வழக்கில் இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டம்

தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் விழுப்புரம் நகராட்சித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினா் கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவுத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,... மேலும் பார்க்க

திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15-க்கும் மேற்பட்டோா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க