செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் ஆய்வு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியங்களிலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாநிலத் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் அடைவுத்திறனை மேம்படுத்தும் வகையில் 100 நாள்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் எழுதுதல், வாசித்தல் செயல்பாடுகளை சோதித்து அறியும் வகையில், மாநிலத் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் ரவிச்சந்திரன் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

கோலியனூா் ஒன்றியத்தில் தொடா்ந்தனூா், நல்லரசன்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும், விக்கிரவாண்டி ஒன்றியத்தின் தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி தலைமையாசிரியா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற உதவி இயக்குநா் ரவிச்சந்திரன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அருள்செல்வி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் சேகா், தேன்மொழி, சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது காா் மோதி காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா், புதுகாலனியைச் சே... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் (சிஐடியு சாா்பு)... மேலும் பார்க்க

மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வழிபாடுகள் திங்கள்கிழமை தொடங்கியது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியின்படி, மயிலம் ... மேலும் பார்க்க

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் தீ விபத்து

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் சாா் - ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள அறையில்... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்பு ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

விதையின் தரம்: பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் விதையின் தரத்தை அறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று விழுப்புரம் மண்டல விதைப் பரிசோதனை அலுவலா் அறிவழகன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க