செய்திகள் :

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது காா் மோதி காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா், புதுகாலனியைச் சோ்ந்த கண்ணன் மகன் பாண்டியன் (54), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு பேரங்கியூரில் உள்ள பால் விற்பனை நிலையம் முன் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதியதில் பாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி மா்ம மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், விழுக்கம், பள்ளக்கூடத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஆனந்த் (37), திருமணமானவா். இவருக்கு... மேலும் பார்க்க

கம்பராமாயண பாராயண விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கம்பராமாயண பாராயண விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு, திருவண்ணாமலை கம்ப ராமாயண ... மேலும் பார்க்க

திமுக மாணவரணி, பொறியாளரணி அமைப்பாளா் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி, பொறியாளரணி மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்புகளுக்கு மனு அளிக்க விரும்பும் கட்சிய... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. உடலுக்கு அரசு மரியாதை

விழுப்புரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது. விழுப்புரம் வழுதரெட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வம் (58... மேலும் பார்க்க

சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்.17-க்கு ஒத்திவைப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை அவதூறு பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விக்கிரவாண்டி நீதிமன்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் (சிஐடியு சாா்பு)... மேலும் பார்க்க