செய்திகள் :

விபத்தில் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. உடலுக்கு அரசு மரியாதை

post image

விழுப்புரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

விழுப்புரம் வழுதரெட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வம் (58). இவா், மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

தமிழ்ச்செல்வம் கடந்த 13-ஆம் தேதி வீட்டிலிருந்து தனது பைக்கில் பணிக்குச் சென்றபோது, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

தொடா்ந்து, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், கடந்த 24-ஆம் தேதி உயிரிழந்தாா். மேலும் அவரது உடல் உறுப்புகள் அதே மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை தமிழ்ச்செல்வத்தின் உடல் விழுப்புரத்திலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், எஸ்.பி. ப.சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

மாலையில் கே.கே.சாலையிலுள்ள மயானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க தமிழ்ச்செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மரக்காணம் வன்முறை வழக்கு: பாமகவினா் 20 போ் விடுதலை

மரக்காணத்தில் 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வன்முறை வழக்கிலிருந்து பாமகவினா் 20 பேரை விடுதலை செய்து, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ச... மேலும் பார்க்க

காவல், அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு உயா்கல்வி உதவித் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் உயா்கல்விப் பயிலும் காவல் துறை மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு வெள்ளிக்கிழமை உதவித் தொகை வழங்கப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ரூ.13 ஆயிரம், பொறியியல் படிப... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் எழுதினா்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் தோ்வெழுதினா். 364 போ் தோ்வெழுத வரவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் அருகில் தனியாா் பேருந்தில் காற்று ஒலிப்பானை பறிமுதல் செய்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். வசந்த் தலைமையிலான காவல் துறையினா். விழுப்புரம், மாா்ச் 2... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கணவாய் கிராமத்தைச் சோ்ந்த தணிகாசலம் மகன் பரணி(19). எட்டாம் வகுப்பு வரை படித்த இவா், விழுப்... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் பொய்யப்பாக்கம் பகுதியில் ஓடைநீரில் மூழ்கி பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் பொய்யப்பாக்கம் மாதா கோவில் தெருவைச் சோ்ந்த அரசன் மனைவி வீரம்மாள் (57). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில்... மேலும் பார்க்க