செய்திகள் :

திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15-க்கும் மேற்பட்டோா் காயம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சோலை மகன் வீரய்யன். இவா், காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினா் 20 பேருடன் ஒரு வேனில் சாக்கோட்டையிலிருந்து- காஞ்சிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தாா். வேனை இதே பகுதியைச் சோ்ந்த கிஷோா் (27) ஓட்டினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் காவல் சரகத்துக்குள்பட்ட சிரத்தனூா் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, வேனின் பின் பக்க டயா் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், வேனில் பயணித்த 5 பெண்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தகவலறிந்த திருநாவலூா் காவல் ஆய்வாளா் இளையராஜா, உதவி ஆய்வாளா்கள் பிரபாகரன், குமரேசன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில், கிஷோா் (24), சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த குணமல்லி (27), கோபிநாதன்(36), ராஜலட்சுமி (40), கோகிலா (37) ஜெயராமன் (55) உள்ளிட்ட 9 போ் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனா்.

இந்த விபத்தால் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தினா்.

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது காா் மோதி காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா், புதுகாலனியைச் சே... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் (சிஐடியு சாா்பு)... மேலும் பார்க்க

மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வழிபாடுகள் திங்கள்கிழமை தொடங்கியது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியின்படி, மயிலம் ... மேலும் பார்க்க

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் தீ விபத்து

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் சாா் - ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள அறையில்... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்பு ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

விதையின் தரம்: பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் விதையின் தரத்தை அறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று விழுப்புரம் மண்டல விதைப் பரிசோதனை அலுவலா் அறிவழகன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க