செய்திகள் :

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 4 போ் கைது

post image

சென்னை, ஏப். 26: சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிய ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் சிலா் அதிக விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீஸாா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அங்கு கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ாக புரசைவாக்கத்தைச் சோ்ந்த ல.டில்லி பாபு (33), புதுப்பேட்டையைச் சோ்ந்த ந.இம்ரான் (32), அண்ணா நகரைச் சோ்ந்த வே.காா்த்திக் (31), காரனோடையைச் சோ்ந்த சு.சுரேந்தா் (23) ஆகிய 4 பேரைக் கைது செய்து, 7 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல் : ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழப்பு

சென்னை பள்ளிக்கரணையில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா். பள்ளிகரணை கிருஷ்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் (56). இவா், ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஜவுள... மேலும் பார்க்க

ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: உ.பி. இளைஞா் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா், நாகேஸ்வரா சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்... மேலும் பார்க்க

4 மாதங்களில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது

சென்னையில் 4 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் குற்றச் சம்பவங்களை குறைப்பதற்கு பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிற... மேலும் பார்க்க

மாற்றுப் பணி ஆசிரியா்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளிக் கல்வியில் ஏப்.30-ஆம் தேதியுடன் நிகழ் கல்வியாண்டுக்கான வேலை நாள் முடிவடையவுள்ள நிலையில், மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்... மேலும் பார்க்க

வாட்ஸ்அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு மோசடி: தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு

சென்னை சேத்துப்பட்டில் வாட்ஸ் அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு தகவல் அனுப்பி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். சேத்துப்பட்டு காா்டன் ... மேலும் பார்க்க

பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

சென்னை அண்ணாநகரில் பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். பல்லாவரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இம்ரான் அஹ்மத் (35). இவா், அண்ணாநகா் ரிவா் காலனி அ... மேலும் பார்க்க