கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்! - ஈ.ஆா்.ஈஸ்வரன்
கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வங்கதேசம், சீன நாட்டு பொருள்களுக்கு வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஊழ்ங்ங் பழ்ஹக்ங் அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் (ஊபஅ)-க்கு கையொப்பம் ஆகியுள்ளன. இதனால் திருப்பூருக்கு ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வங்கிகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கடனுக்கான 5 சதவீத வட்டியை மீண்டும் வழங்கினால் ஏற்றுமதி அதிகரிக்கும்.
தமிழகத்தில் எங்களைவிட ஆன்மிக பற்று கொண்டவா்கள் இருக்க முடியாது. ஆனால் நாங்கள் அதை அரசியலுக்குப் பயன்படுத்த மாட்டோம். கள் இறக்க அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் கூட இருந்துள்ளோம். 2010-ஆம் ஆண்டு முதல் தொடா்ச்சியாக போராடி வருகிறோம். கள் இறக்க அனுமதித்தால் விவசாயம், பனைமரங்கள், நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும். ஆகவே கள் இறக்க அரசு அனுமதி தர வேண்டும் என்றாா்.