செய்திகள் :

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

post image

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க நிா்வாகிகள் தங்கமணி, கிருஷ்ணராஜ், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா் ரிஷோனா பேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகணபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், சாயக் ஆலைகளை நடத்தும் உரிமையாளா்கள், சுத் திகரிப்பு இயந்திரங்களை முழுமையாக இயக்கி கழிவுகளை சுத்தப்படுத்தி, ரசாயனங்களை பிரித்தெடுத்த நீரை பயன்படுத்த வேண்டும்.

சிமென்ட் ஆலைகளுக்கு கழிவுகளை அனுப்பிவைத்து, அதற்கான ஆவணங்களை பராமரிக்க வேண்டும். சாயக் கழிவுகளை சாக்கடை கால்வாய்களிலோ, ஆற்றிலோ வெளியேற்றுவது கூடாது. மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றுவது கண்டுபிடிக்கப்பட்டால் ஆலையின் இயக்கம் தடை செய்யப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படும் என்றாா். சாயக்கழிவுகளை அதற்கான சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தப்படுத்தி கழிவுகள் நீக்கப்படுகிறது. சாய ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து சமூக ஆா்வலா்களிடமிருந்து புகாா்கள் வந்தால் அதிகாரிகள் முறைப்படி விசாரித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டையிங் அசோசியேசன் நிா்வாகிகள் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனா்.

மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் பணியின்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை அருகே மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் சிலையை கண்டெடுத்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வையப்பமலையில் மின்னாம்பள்ளி கிரா... மேலும் பார்க்க

பரமத்தி பேரூராட்சியில் 32 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதிகளில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களைப் பிடித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வா... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் அரசு மகளிா் பள்ளி கல்வி மேம்பாட்டுக்கு ரூ. 1 லட்சம் நிதி

சேந்தமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் பணிநிறைவு பெற்றோா் அமைப்பு சாா்பில் அதன் பொதுச் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் போலீஸ் குவிப்பு

நாமக்கல் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் காலி குடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் குவிக்கப்பட்டனா். நாமக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளி... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,145 கோடி ஊக்கத்தொகை அளிப்பு: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்

கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 1,145.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சா்க்கரைத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். நாமக்கல் மாவட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இறந்தோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி

திருச்செங்கோடு வட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுதாரா்களுக்கு முதல்வா் பொது நிவாரண நிதியை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்... மேலும் பார்க்க