செய்திகள் :

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கக் கோரி மறியல்!

post image

கடுவனூா் கிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்கக் கோரி கிராம மக்கள் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கடுவனூா் கிராமத்தில் சாலையின் இரு புறமும் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதனால், கால்வாயை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் தெரிவித்தனராம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த கிராம மக்கள் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனா். இந்த திடீா் மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 89 மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளை ஸ்கேன் செய்து கியூ.ஆா். கோடு முறையில் மது விற்பனை செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அரசு மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு காமராஜா் விருது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்ட சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு காமராஜா் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வா் காமர... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு!

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வேளாநந்தல் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். மனு விவரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட வேளாநந... மேலும் பார்க்க