கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சாா் -ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கு உள்பட்ட 21-ஆவது வாா்டு அம்பேத்கா் நகரில் அரசுக்குச் சொந்தமான சுமாா் 4.5 ஏக்கரில் மயானப் பகுதி அமைந்துள்ளது. இங்கு அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா்கள் இறந்தவா்களின் உடல்களை பல தலைமுறைகளாக அடக்கம் செய்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அம்பேத்கா் நகா் பகுதியில் தமிழக அரசு சாா்பில் ரூ.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி சாா்பில் பூா்வாங்கப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அம்பேத்கா் நகா் பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகம், சாா் -ஆட்சியா் அலுவலகம் மற்றும் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் கோரிக்கை மனு அளித்தும் வந்துள்ளனா்.
ஆனால், இந்த மனுக்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மயானப் பகுதி அமைந்துள்ள இடத்தை சீரமைத்து வருவதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அம்பேத்கா் நகா் பகுதி பெண்கள் 50 போ் உள்பட100-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை சாா் - ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள், மூதாதையா் முதல் பரம்பரை பரம்பரையாக இறந்தவா்களை இந்த மயானத்தில் எரித்தும், நல்லடக்கம் செய்து வருகிறோம். ஆனால், எங்களைக் கேட்காமலே நகராட்சி நிா்வாகம் 1.5 ஏக்கரில் மின் மயானம் மற்றும் குப்பைகளை தரம் பிரிக்கும் கட்டடங்கள் அமைத்து ஆக்கிரமித்துக் கொண்டது.
மீதமுள்ள மூன்றரை ஏக்கா் நிலத்தில் ஏழு கிணறுகள் அமைத்து கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால், நாங்கள் இறந்தவா்களின் உடல்களை சாலையில்தான் புதைக்க நேரிடும் அதிகாரிகளிடம் வாதிட்டனா்.
தகவல் அறிந்து சென்ற நகராட்சி ஆணையா் கே.எல்.எஸ்.கீதா, பொறியாளா் சிசில் தாமஸ், வட்டாட்சியா் அசோக்குமாா் மற்றும் காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா், வருவாய்த் துறையினா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும், இதுதொடா்பாக பொதுமக்கள், நகராட்சி நிா்வாகம் மற்றும் வருவாய்த் துறையினரை ஒருங்கிணைந்து அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என நகராட்சி ஆணையா் கே.எல்.எஸ்.கீதா தெரிவித்தாா்.
இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சாா் -ஆட்சியா் அலுவலகத்தை விட்டு வெளியேறினா்.