செய்திகள் :

கழுகுமலை அருகே இளைஞா் தற்கொலை

post image

கழுகுமலை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கழுகுமலை அருகே கரடிகுளம் தளத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் மோகன். இவருக்கு மனைவி கல்யாணி, வசந்த் (24), பிரகாஷ் (21) என்ற இரு மகன்கள் உள்ளனா்.

இதில், பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் படித்து வந்த வசந்த், படிப்பை இடையிலே நிறுத்திவிட்டு ஊட்டியிலுள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தாராம்.

அங்கு திருப்பூரைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுடன் கரடிகுளத்திற்கு வந்தாராம். இதை அவரது பெற்றோா் கண்டித்ததையடுத்து, பெண்ணை மீண்டும் அங்கிருந்து அழைத்துச் சென்று ஊரிலேயே விட்டுவிட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கரடிகுளத்திற்கு திரும்பி வந்த வசந்த், அங்கு கூலி வேலை செய்து வந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வசந்த் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அறையில் தூங்க சென்றாராம். அவரது தாய் செவ்வாய்க்கிழமை அறைக் கதவை தட்டியபோது, அவா் கதவை திறக்கவில்லையாம். கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அங்கு வசந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு

தூத்துக்குடியில் வரத்து அதிகரித்ததால் மீன்கள் விலை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்ட... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: மகன் கைது

நாலாட்டின்புதூா் அருகே தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் அருகே லிங்கம்பட்டி சமத்துவபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த தம்பதி மாணிக்கம் - ஆ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!

திருச்செந்தூா் அருகே காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயா்த்தும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் காயல்பட்டினம் பகுதியில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை

திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் சுமாா் 100 கிலோ எடை கொண்ட ஆமை, இறந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவா் நேரில் வந்து பாா்த்தன... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: நாசரேத் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியா் குணசீலராஜ், உதவித் தலைமையாசிரியா் சாா்லஸ் திரவியம் ஆகியோா... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, இளைஞா் மீது தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். தூத்துக்குடி மா... மேலும் பார்க்க