செய்திகள் :

கழுத்தை கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை; போராடி மீண்டு வந்து குட்டிகளுக்கு பாலூட்டிய நாய்..!

post image

மும்பை புறநகர் பகுதியான கோரேகாவ் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் மும்பை திரைப்பட நகரம் இருக்கிறது. அதோடு பொதுமக்களும் வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருக்கின்றனர்.

எனவே, `குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்து விட்டது, மனிதர்களை தாக்கி விட்டது' என்று இந்த வனப்பகுதியில் பிரச்னைகள் வருவதுண்டு.

சிறுத்தையிடமிருந்து தப்பித்த நாய்

சிறுத்தைகளுக்கு காட்டுக்குள் இரை கிடைக்காத சமயத்தில், மனிதர்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குள் வந்து தெருநாய்கள், ஆடு, மாடுகளை பிடித்து செல்வது வழக்கம்.

அது போன்று சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாய் ஒன்று அதன் பிடியில் இருந்து தப்பித்து வந்துள்ளது. கோரேகாவ் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இக்காட்சி பதிவாகி இருந்தது.

இரவில் சிறுத்தை ஒன்று மனிதர்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் புகுந்து குட்டி போட்டிருந்த நாய் ஒன்றின் கழுத்தை பிடித்து காட்டுக்குள் தூக்கிச்சென்றது. ஆனால் அந்த நாய் சிறுத்தையுடன் போராடி அதனிடமிருந்து தப்பித்து கழுத்தில் காயத்துடன் தனது குட்டிகள் இருக்கும் இடத்திற்கு வந்தது. அதோடு காயத்தோடு தனது குட்டிகளுக்கு பால் கொடுத்தது.

சிறுத்தையிடமிருந்து தப்பித்த நாய்

இக்காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. காயத்துடன் குட்டிகளுக்கு நாய் பால் கொடுப்பதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் யாமினி அந்த நாயை தூக்கிச்சென்று அதற்கு சிகிச்சையளித்தார்.

நாயால் சரியாக சாப்பிட முடியவில்லை. சிறுத்தை கழுத்தை பிடித்ததில் உணவுக்குழாய் உடைந்திருந்தது. இதையடுத்து அந்தேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஆப்ரேசன் செய்யப்பட்டது. நாயின் குட்டிகளை அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்து வளர்த்து வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Kerala: சிட்டுக் குருவியைக் காப்பாற்ற 50 கி.மீ பயணித்த நீதிபதி - நெகிழவைத்த கிராமத்தினர்!

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள உள்ளிக்கல் என்ற கிராமத்தினர், ஒரு சிறிய உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. சீல் வைக்கப்பட்ட துணிக்கடையில் சிக்கிக்கொண்ட சிட... மேலும் பார்க்க

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்; குட்டிகளைக் காக்க எச்சரிக்கை வளையத்தை உருவாக்கிய யானைகள் | Viral video

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ நகரில் நேற்று (ஏப்ரல் 14) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, 5.2 ரிக்டர் அளவில் ஜூலியனுக்கு தெற்கே... மேலும் பார்க்க

Resignation: "இப்படித்தான் நடத்தப்பட்டேன்" - கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய ஊழியர்!

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபர், ஊழியர் ஒருவரின் கடுமையான ஆனால் வினோதமான ராஜினாமா கடிதத்தை லின்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு கழிப்பறை காகிதத்தைப்போல இழிவாக நடத்தப்பட்டதாகவும், குறைத்து ... மேலும் பார்க்க

Cambodia: கன்னிவெடிகளை கண்டறிந்து உயிர்களைக் காக்கும் எலி - யார் இந்த ஹீரோ?

போர்களில் விடப்பட்ட 100க்கும் மேலான கன்னிவெடிகளை கண்டுபிடித்த முதல் எலி என்ற சாதனையைப் படைத்துள்ளது, ரோனின் என்ற 5 வயதான 'ஆப்ரிக்க பெரிய பை எலி' (African Giant Pouched Rat) . கின்னஸ் உலக சாதனைகள் கூறு... மேலும் பார்க்க

MP: சிறுத்தைக்குத் தண்ணீர் வைத்த 'வைரல் ஓட்டுநர்' சஸ்பெண்ட்; அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன?

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வனத்துறையில் பணியாற்றும் ஓட்டுநர் சிறுத்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் வீடியோ வைரலானது.மனதை நெகிழ வைக்கும் அந்த வீடியோவால், ஓட்டுநருக்குப் பிரச்னை வந்துள்ளது. அவர் தனது வ... மேலும் பார்க்க

ஆந்திரா: `பறவைக் காய்ச்சல் பாதிப்பு' - சமைக்காத கோழிக்கறியை சாப்பிட்ட 2 வயது சிறுமி உயிரிழப்பு

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் தொற்று காணப்படுகிறது. அங்குள்ள பல்நாடு மாவட்டத்தில் நரஸ்ராவ்பேட் என்ற நகரத்தில் வசிக்கும் இரண்டு வயது சிறுமிக்கு அவளது பெற்றோர் சமைப்பதற்காக வாங்கி வந்த கோழி கறியில் ஒரு ச... மேலும் பார்க்க