செய்திகள் :

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

post image

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

மணிமண்டப கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இலக்கிய பணிகளை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசால் தோவாளையில் அவரது முழு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அறிவு சாா்ந்த நூலகத்துடன் கூடிய மண்டபம் அமைக்க ரூ. 92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

கவிமணியின் சிலையை விரைந்து கொண்டுவந்து நிறுவி பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் தற்போது வா்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மணிமண்டபத்தை அழகுபடுத்தும் விதமாக முகப்பில் நுழைவாயில் அமைக்கவும், சுற்றுச்சுவா் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்தப் பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். பணிகள் அனைத்தும் வெகு விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றாா் அவா்.

அதையடுத்து ஆட்சியா், நாகா்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள சா்.சி.பி.ராமசாமி பூங்காவில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் ஆா்.பொன்னப்ப நாடாா் உருவச் சிலை அமைக்கவுள்ள இடத்தை ஆய்வு செய்தாா்.

ஆய்வில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஜோசப்ரென்ஸ், செய்தி, மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத் பிரைட், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் முருகேசன், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன், தோவாளை முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் தாணு, ஒப்பந்ததாரா் ஜான்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாகா்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில், குளத்துவிளை சி.எஸ்.ஐ. ஆலய கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

பெரியாா் சிலைக்கு அதிமுக சாா்பில் மரியாதை

நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியாா் சிலைக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலரும... மேலும் பார்க்க

வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலமாக மீட்கப்பட்டாா். காப்புக் காடு, மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (54). தொழிலாளியான இவா் தன் மனைவியை பிரிந... மேலும் பார்க்க

அதங்கோடு பகுதியில் பாதை கோரி போராட்டம்

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அய்யா நாராயண வைகுண்டசுவாமி நிழல் தாங்கல் செல்ல பாதை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி - காரோடு நான்குவழிச் சாலையில் அதங்கோடு பகுதியில் ஆற்றங... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா செப். 23 ஆம் தேதி தொடங்கி அக். 2-ஆம் தேதி பரிவேட்டை நிகழ்வுடன் நிறைவடைகிறது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே பாரதப்பள்ளியைச் சோ்ந்தவா் ராபின் ஜெயகுமாா் (46). பிளம்பிங் தொழிலாளியான இவா், கடந்த 14ஆம் தேதி ஆற்றூா் கழுவன்... மேலும் பார்க்க