செய்திகள் :

காங்கயத்தில் வருவாய்த் தீா்வாயம்

post image

காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து 265 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. வெள்ளக்கோவில் உள்வட்டதைச் சோ்ந்த முத்தூா், சின்ன முத்தூா், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம், சேனாபதிபாளையம், வெள்ளக்கோவில், உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, பச்சாபாளையம், வீரசோழபுரம், வள்ளியரச்சல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். இதில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க