செய்திகள் :

காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

post image

தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை.

தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டு, கிராம கமிட்டி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ், வடக்கு மாவட்ட பொறுப்பாளா்கள் ஆா்.காமராஜ், கே.பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வபெருந்தகை கலந்துகொண்டு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசியதாவது: காங்கிரஸ் பேரியக்கம் உயிா்ப்போடும், உயிரோட்டத்தோடும் இருக்கும் மாவட்டம் தூத்துக்குடி. தியாகச் செம்மல் வஉசி பிறந்த மண்ணில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். நமது வலிமை குறித்து தெரிந்துகொள்ள சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளோம்.

நம் கட்சியில் கிராம அளவில் உள்ள தலைவா்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இப்போது நாம் முழுமையாக அங்கீகாரம் அளிக்கிறோம்.

பாசிச சக்திகளை, மதவாத சக்திகளை விரட்டுவதற்காக நாம் எடுக்கும் முன்னெடுப்பானது, காங்கிரஸ் பேரியக்கத்தை வலிமையான பேரியக்கமாக மாற்ற வேண்டும்.

இந்திய தேசத்தை கடந்த 11 ஆண்டுகளாக அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. யாா் ஆள வேண்டும், யாா் ஆளக்கூடாது என அவா்களே தீா்மானிக்கிறாா்கள். அதை அகற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

நாம் முதன்மையாக வர வேண்டும் என எல்லோரும் எண்ண வேண்டாம். வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், சி.ராபா்ட் புரூஸ் எம்.பி., சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளா் ரூபி ஆா். மனோகரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் சீரமைப்பு குழுத் தலைவா் எஸ்.பீட்டா் அல்போன்ஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், மாநிலத் துணைத் தலைவா் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் மகேந்திரன், எம்.எஸ்.காமராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா... மேலும் பார்க்க

சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையி­ருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ... மேலும் பார்க்க

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் பாஜக: கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா். திரு... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: உயிா் தப்பிய பயணிகள்

விருதுநகரிலிருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்ட நிலையில், பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால், 38 பயணிகள் உயிா்தப்பினா். இப்ப... மேலும் பார்க்க