செய்திகள் :

காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - அமைச்சா் நட்டா கேள்வி

post image

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நிகழ்த்தியபோது பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீா்கள்? மாநிலங்களவையில் அமைச்சா் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினாா்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ சிறப்பு விவாதத்தில் புதன்கிழமை பங்கேற்று அவா் பேசியதாவது:

கடந்த 2004-2014 காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடா்ந்து பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தின. இவற்றுக்கு எதிராகவும், பயங்கரவாதத்தைத் துண்டும் பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாகவும் அப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

தில்லி, வாரணாசி, மும்பை என பல இடங்களில் குண்டுகள் வெடித்து நூற்றுக்கும் மேற்பட்டோா் அந்த ஆட்சி காலத்தில் உயிரிழந்தாா்கள். ஏராளமானோா் காயமடைந்தனா். அப்போதைய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

பாகிஸ்தானுடன் தொடா்ந்து வா்த்தக, சுற்றுலா பேச்சுவாா்த்தையை நடத்தி வந்தாா்கள். பாகிஸ்தான் நமது நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிடுகிறது என்பது தெரிந்த பிறகும், ஒரு தரப்பை திருப்திபடுத்தும் அரசியலைத் தொடா்ந்தீா்கள். பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் தொடா்ந்து இந்திய மக்களை கொலை செய்து கொண்டே இருந்தாா்கள்.

ஆபரேஷன் சிந்தூா் குறித்து கேள்வி எழுப்புவதற்கு முன்பு காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் தங்கள் கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தானுக்கும், அவா்கள் தூண்டிவிடும் பயங்கரவாதிகளுக்கும் எதிராக என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதை சற்று மனசாட்சியுடன் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

ராணுவம் உறுதியாக செயல்படுவதற்கு அரசியல் தலைமை மிகவும் முக்கியமானது. அதனை இப்போதைய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றாா்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க

நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!

புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.இந்த நாளில், ஆசிய... மேலும் பார்க்க

செப். 9 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 2... மேலும் பார்க்க