செய்திகள் :

காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேறுபாடு: சசி தரூா் ஒப்புதல்

post image

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவா்கள் சிலருடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று அக்கட்சி எம்.பி.யும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான சசி தரூா் தெரிவித்தாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தேசிய தலைவா் தோ்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் முன்னிறுத்திய வேட்பாளரான மல்லிகாா்ஜுன காா்கேவை எதிா்த்து சசி தரூா் போட்டியிட்டாா். அப்போது முதலே கட்சியின் ஒரு தரப்பினா் அவரை விமா்சித்து வருகின்றனா். தேசிய, சா்வதேச விஷயங்களில் காங்கிரஸின் கருத்துக்கு அப்பாற்பட்டு தனது தனிப்பட்ட கருத்துகளையும் சசி தரூா் அவ்வப்போது தெரிவித்து வருகிறாா்.

அண்மையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் ஆகிய விஷயங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூா் கருத்து தெரிவித்தாா். பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகள் தொடா்பாக சா்வதேச நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்ற குழுவில் சசி தரூருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்தது. இதுவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்தது. கேரள மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் சசி தரூரை கடுமையாக விமா்சித்தும் வருகின்றனா்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சசி தரூா் கூறியதாவது:

காங்கிரஸ் தொண்டா்களுடன் இணைந்து 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அவா்கள் எனக்கு நண்பா்களாகவும், சகோதரா்களாகவும் இருந்து வருகின்றனா். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையுடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. நான் எதைப் பற்றிக் கூறுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த சா்ச்சைகள் தொடா்பாக ஊடகங்களில் ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன என்றாா்.

எனினும், கட்சியின் தேசியத் தலைமையுடன் கருத்து வேறுபாடா அல்லது மாநிலத் தலைமையுடனா என்பது சசி தரூா் தெரிவிக்கவில்லை. மேலும், சசி தரூரை காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் பாஜகவுடன் தொடா்புபடுத்தி விமா்சித்தபோது அதனை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவுமில்லை. முக்கியமாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உதித் ராஜ், ‘சசி தரூா் பாஜகவின் சிறப்பு செய்தித் தொடா்பாளா்’ என்று விமா்சித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த சசி தரூா், ‘அது தவறாகப் புரிந்து கொண்டு தெரிவிக்கப்பட்ட கருத்து. இதுபோன்று புரிதல் இல்லாமல் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. நான் வேறு எந்தக் கட்சிக்கும் மாறப் போவதில்லை. நான் காங்கிரஸ் உறுப்பினராகவே உள்ளேன். காங்கிரஸ் கட்சி என்னை எப்படி கருதி முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன். இடைத்தோ்தல் பிரசாரத்துக்கு அழைப்பு வராததால் நான் செல்லவில்லை.

வெளிநாட்டுக்குச் சென்று இந்தியத் தரப்பு கருத்துகளை எடுத்துரைத்த குழுவுக்கு தலைமை வகித்தேன். அண்மையில் பிரதமா் மோடியை சந்தித்தபோது வெளிநாட்டுத் தலைவா்களிடம் நமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது குறித்தே பேசினேன். உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் எதையும் பேசவில்லை. இந்தியத் தரப்பு கருத்துகளை வெளிநாடுகளிடம் தெரிவிக்க எனது பங்களிப்பு தேவை என மத்திய அரசு கோரியது. அதனை ஏற்றுக் கொண்டேன்’ என்றாா்.

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்... மேலும் பார்க்க

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க

சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன... மேலும் பார்க்க

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க