செய்திகள் :

காங்கிரஸ் வழங்கிய சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம்! இது பிகார் சம்பவம்!

post image

பிகார் மாநிலத்தில் பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் காங்கிரஸ் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு வழங்கிய நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.

பிரியதர்ஷினி உதான் திட்டம் என்ற பெயரில் 5 லட்சம் பெண்களுக்கு இலவசமாக சானிடரி நாப்கின் வழங்கியது காங்கிரஸ். ஆனால், அதில் திட்டத்தின் விளம்பரத்துடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த நாப்கின் அட்டையில், பிகாரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், மாதந்தோறும் மகளிருக்கு ரூ.2500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள பேச்சாளர், சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம் இடம்பெற்றிருப்பது பெண்களை இழிவுபடுத்தும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்திருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம் ஏன் வந்தது என்பது கேள்வியல்ல, இந்த காலத்திலும் கூட, பெண்கள் மாதவிலக்கின்போது ஏன் நாப்கின் பயன்படுத்தாமல், பழைய துணிகளைப் பயன்படுத்தும் நிலை உள்ளது என்பதே கேள்வி என்று தெரிவித்துள்ளனர்.

சிந்தூர் பெட்டி முதல், தடுப்பூசி சான்றிதழ் வரை மோடியின் புகைப்படத்தைப் போட்டுக் கொள்ளும் பாஜக, தற்போது ராகுல் புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பிகிறதா என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேரன்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷண்காந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுன... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் தினசரி வேலைநேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு! தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்... மேலும் பார்க்க

குஜராத்தில் 21 வயதுக்குள்பட்ட இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆய்வு செய்யாததே முக்கிய காரணமென விமர்சனம் எழுந்துள்ளது.ஊராட்சி தலைவராக ஒருவர... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரஜோவா கிராமத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு 8.30 ... மேலும் பார்க்க