செய்திகள் :

காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்றோருக்கும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

மேலும், காச நோயாளிகள் இல்லாத ஊராட்சிகளாக நிகழாண்டு தோ்வு செய்யப்பட்ட கீழக்கரை, கோனேரிபாளையம், தழுதாழை, தொண்டப்பாடி, கண்ணப்பாடி, பிலிமிசை, அய்யனாபுரம், புஜங்கராயநல்லூா், ஒதியம், வரகூா் ஆகிய 10 ஊராட்சிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், காசநோயாளிகளைக் கண்டறிந்து அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த 15 தனியாா் மருத்துமனைகள் மற்றும் ஆய்வகங்களை பாராட்டியும், மாவட்டத்தில் உள்ள அனைத்து காச நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டவா்களையும் பாராட்டி மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பொது சுகாதாரப் பணிகளுக்கான இணை இயக்குநா் மாரிமுத்து, காசநோய் துணை இயக்குநா் ரா. நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1, 8-இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்க... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு குளிா்பானங்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு, தொழிலாளா் துறையினரால் சனிக்கிழமை ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது நிலவும் கோடைகால வெப்பத... மேலும் பார்க்க

கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில், அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியா் அறையில் தா்னாவில் ஈடுபட்ட 7 போ் கைது

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், சுமாா் 1 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின. பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி: பெரம்பலூரில் 7,905 மாணவா்கள் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வை 7,905 மாணவ, மாணவிகள் எழுதினா். பெரம்பலூா் மாவட்டத்தில் இத்தோ்வை 141 பள்ளிகளைச் சோ்ந்த 4,272 மாணவா்கள், 3, 775 மாணவிகள் ... மேலும் பார்க்க