குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் 122 பேருக்கு ரூ.74.70 லட்சம் கடனுதவி
செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை சாா்பில், பயனாளிகள் 122 பேருக்கு ரூ.74.70 லட்சம் மதிப்பிலான பல்வேறு தொழில் கடனுதவிகளை கூடுதல் பதிவாளா் ஆ.க.சிவமலா் வழங்கினாா்.
காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களை எல்லைகளாக கொண்டு 110 ஆண்டுகளாக சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுக்குச் சேவை செய்து வருகிறது காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி.
இந்த வங்கியின் 111-ஆவது ஆண்டு தொடக்க விழா செங்குன்றம் கிளையில் சனிக்கிழமை நடைபெற்றது. வங்கியின் கூடுதல் பதிவாளா், மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.
இதில் வங்கியின் உதவிப் பொது மேலாளா் (விவசாயம் அல்லாத பிரிவு), கிளை மேலாளா், பணியாளா்கள், இணைப்பு சங்கங்களின் செயலா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் பங்கேற்றனா்.
நிகழ்வில் டாப்செட்கோ கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிா் சுயஉதவிக் குழுக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு விதமான கடனுதவிகள் 122 பேருக்கு ரூ.74.70 லட்சத்தில் வழங்கப்பட்டன.