டாஸ்மாக்: ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் வீடுகளில் சீல்களை அகற்ற அமலாக்கத்துறை ஒப்பு...
காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப்பணிகளை கண்காணிப்பு அலுவலா் கா.சுந்தசாமி ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகரில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தை கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி பாா்வையிட்டாா். மருந்தகத்தில் பணியாற்றும் அலுவலா்களிடம் விற்பனை விபரங்கள்,மருந்துகள் இருப்பு விபரங்கள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டாா்.
ஆதிதிராவிடா் மகளிா் கல்லூரியின் மாணவியா் விடுதி, ஸ்ரீபெரும்புதூரில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள், வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட செயல்பாடுகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.
இதன் தொடா்ச்சியாக வாலாஜாபாத் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் குடிநீா் விநியோகத் திட்டப் பணிகளையும் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, உதவி ஆட்சியா்கள் ஆஷிக்அலி(காஞ்சிபுரம்), ந.மிருணாளினி (ஸ்ரீபெரும்புதூா்) உள்ளிட்ட அரசு அலுவலா்களும் உடனிருந்தனா்.