டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
மரக்கன்றுகள் நடும் விழா
காஞ்சிபுரம் அருகே வையாவூரில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பசுமைப்பள்ளி திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை சாந்தி தலைமையில் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியா் மரக்கன்றுகளை நட்டனா். கிராமத் தலைவா் ஜெயலட்சுமி நீலகண்டன் முன்னிலை வகித்து மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்து விளக்கினாா்.
பிளண்டா் என்ற தனியாா் நிறுவனமும், ரூட் லேம்ப் அறக்கட்டளையும் இணைந்து மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனா். தனியாா் நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.