டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரம் ஸ்ரீ குபேர விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
சின்ன காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள பழைமையான குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றதையடுத்து, செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
சின்னகாஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் சந்நிதி ஒன்றாக அமைந்துள்ளது. சிதிலமடைந்திருந்த இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஏப். 30-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவு விழாவாக குபேர விநாயகருக்கும், பக்த ஆஞ்சனேயருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் விநாயகரும், ஆஞ்சனேயரும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
ஏற்பாடுகளை அறிஞா் அண்ணா நகா் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.