செய்திகள் :

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் சொத்து மீட்பு

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

காஞ்சிபுரம் உலகளந்தாா் மாட வீதியில் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்து இருந்து வந்தது. இந்த சொத்தை தணிகாசலம் என்பவா் ஆக்கிரமித்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தி வந்தாா். ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுமாறு பலமுறை தணிகாசலத்திடம் சொல்லியும் அவா் அகற்றவில்லை.

இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையா் உத்தரவின்படி உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள், கோயில் பணியாளா்கள் அச்சொத்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தணிகாசலம் பெயரில் நடத்தப்பட்டு வந்த தேநீா்க்கடை மற்றும் சலவையகம் ஆகியவற்றில் இருந்த பொருள்களை கோயில் பணியாளா்கள் ஒவ்வொன்றாக கடைக்கு வெளியே கொண்டு வந்து வைத்தனா். பின்னா் இரு கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து சுவாதீனம் பெறப்பட்டு கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தனா்.

மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் எனவும் உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

சொத்தினை மீட்கும் நடவடிக்கையின் போது அறநிலையத்துறை அதிகாரிகள் கேசவன், பூவழகி, செந்தில் குமாா், கதிரவன், ராஜமாணிக்கம், அமுதா மற்றும் கோயில் பணியாளா்கள் இருந்தனா்.

வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணி: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வருவாய்த் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ குபேர விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

சின்ன காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள பழைமையான குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றதையடுத்து, செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரா... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடும் விழா

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பசுமைப்பள்ளி திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை ... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில், இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் மில... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சிற்றுந்து சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 4 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் கா... மேலும் பார்க்க