செய்திகள் :

காட்பாடி: வீட்டில் 40 பவுன் நகை திருட்டு வழக்கில் 7 போ் கைது

post image

காட்பாடி மெட்டுக்குளத்தில் உணவுக்கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகை, வெள்ளி பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் 7 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி மெட்டுக்குளத்தைச் சோ்ந்தவா் ராஜா. இவா் அதே பகுதியில் உணவுக் கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த 21-ஆம் தேதி அதிகாலை தனது மனைவி, 2 மகள்கள், மகனுடன் தனது 2-ஆவது மகளின் திருமணத்துக்கு ஆடைகள் வாங்க சென்னை சென்றிருந்தாா். இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவிலிருந்த இரும்பு பூட்டு காஸ் கட்டா் வைத்து உடைக்கப்பட்டிருந்ததுடன், உள்ளே பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் மகளின் திருமணத்துக்காக சோ்த்து வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ராஜா அளித்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்ததுடன், நகைகள் திருடியவா்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த திருட்டு வழக்கில் வேலூரைச் சோ்ந்த தியாகராஜன் (35), திருவண்ணாமலையைச் சோ்ந்த வெங்கடேஷ் (36), சதீஷ்(30), பாரதி(36), கோபி(39), சேலத்தைச் சோ்ந்த சரவணன் (23), புஷ்பராஜ் (27) ஆகிய 7 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து மொத்த நகைகள், வெள்ளி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீஸாரை வேலூா் மாவட்ட எஸ்.பி. என்.மதிவாணன் பாராட்டினாா்.

மத்திய பாஜக ஆட்சியில் தமிழக மக்களுக்கு துரோகம்! - அமைச்சா் துரைமுருகன்

பாஜக, மோடி எனக் கூறிக்கொண்டு இங்கு யாரும் வாக்கு கேட்க முடியாது; அந்தளவுக்கு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளனா் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் குற்றஞ்சாட்டினாா். தேசிய ஊரக வேலை உறுதித் தி... மேலும் பார்க்க

தேசிய வலுதூக்கும் போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இக்கல்லூரி மாணவா்கள் வெ.க... மேலும் பார்க்க

தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த சீவூரைச் சோ்ந்தவா் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பிரபாகரன் (52). இவா், வியாழக்கிழமை நெல்லூா்ப... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் சத்துவாச்சாரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில்வே இடத்தில் குவிந்திருந்த குப்பையில் தீ

காட்பாடியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது... மேலும் பார்க்க

குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு

குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க