செய்திகள் :

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்; 9 வயது மகன் கண் முன்னே நடந்த கொடூரம்

post image

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கெர்லி என்ற இடத்தில் வசித்து வந்தவர் வீரு என்ற மான் சிங். மான் சிங் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக அவரது மனைவி அனிதா தெரிவித்தார்.

ஆனால் மான் சிங் உடம்பில் காயம் இருந்தது. அதோடு அவரது பல் உடைந்திருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மான் சிங் சகோதரர் கப்பார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மான்சிங் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர் கழுத்தை நெரித்து, மூச்சுதிணறடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது.

விசாரணையில் மான் சிங் மனைவி அனிதாவும், அவரது காதலனும் சேர்ந்து திட்டமிட்டு இக்கொலையை செய்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,'' அனிதா அப்பகுதியில் சிறிய கடை நடத்தி வருகிறார். அக்கடைக்கு அடிக்கடி தெருக்களில் கச்சோரி விற்பனை செய்ய வரும் காசிராம் வருவது வழக்கம். அப்படி வந்ததில் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டு அது திருமணம் தாண்டிய உறவாக மாறியது.

இதனால் அனிதா வீட்டிற்கு, காசிராம் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவர்களது காதலுக்கு மான்சிங் இடையூராக இருந்ததால் இருவரும் சேர்ந்து மான்சிங்கை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

அனிதா, காசிராம்

இதற்காக காசி ராம் கூலிப்படைக்கு ஏற்பாடு செய்தார். இரண்டு பேரும் சேர்ந்து கொலையாளுக்கு ரூ.2 லட்சம் கொடுப்பதாக கூறி 4 பேரை ஏற்பாடு செய்தனர். கொலையாளிகள் நான்கு பேரையும் காசிராம் நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் அனிதாவின் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்கள் வந்ததும் அனிதா வீட்டின் முன் கதவை திறந்து அவர்கள் உள்ளே வர வகை செய்தார்.

அவர்கள் உள்ளே வந்து மான்சிங் உறங்கிக்கொண்டிருக்கும்போது அடித்து உதைத்து கொலை செய்துள்ளனர். காலையில் மான் சிங் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக உறவினர்களிடம் அனிதா கூறியுள்ளார்'' என்று தெரிவித்தனர்.

இக்கொலையை அனிதாவின் 9 வயது மகன் நேரில் பார்த்துள்ளான். அவன் இது தொடர்பாக நேரில் பார்த்ததை போலீஸில் தெரிவித்துள்ளான். அவன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ''நான் உறங்கிகொண்டிருந்தபோது நள்ளிரவில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. உடனே கண் திறந்து பார்த்தபோது எனது அம்மா வீட்டின் முன் கதவை திறந்துவிட்டார். காசி அங்கிள் வெளியில் நின்று கொண்டிருந்தார். காசி அங்கிளுடன் 4 பேரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் வந்தனர். நான் பயத்தில் எழுந்திருக்கவில்லை. உறங்குவது போன்று நடித்துக்கொண்டு நடப்பது அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் எங்களது அறைக்கு வந்தனர். எனது அம்மா படுக்கை அருகில் நின்று கொண்டிருந்தார்.

மான் சிங்

உறங்கிக்கொண்டிருந்த எனது தந்தையை அவர்கள் காலை பிடித்துக்கொண்டு அடித்தனர். காசி அங்கிள் எனது அப்பாவின் கழுத்தில் தலையனை கொண்டு அமுக்கினார். அதனை எனது அம்மா பார்த்துக்கொண்டிருந்தார். நான் எழுந்து எனது அப்பா அருகில் சென்றேன். உடனே காசி அங்கிள் என்னை பிடித்து மிரட்டினார். நான் பயத்தில் அமைதியாகிவிட்டேன். சிறிது நேரத்தில் எனது அப்பா இறந்துவிட்டார். உடனே அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்'' என்று பயத்தில் தெரிவித்தான்.

சிறுவனின் வாக்குமூலம் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அனிதாவும், காசிராமும், பிரிஜேஷ் என்ற கூலிப்படையை சேர்ந்தவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மகன் கண் முன்னே கணவனை காதலனை வைத்து பெண் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்: குடும்பப் பிரச்னை; இரு பேத்திகளை கொன்றுவிட்டு, விபரீத முடிவெடுத்த மூதாட்டிகள்!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28). கடந்த 9 வருடங்களுக்கு முன்பு கர... மேலும் பார்க்க

ஒடிசா கடற்கரையில் ஆண் நண்பர் கண்முன்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 மைனர் உட்பட 10 பேர் கைது

ஒடிசா கடற்கரையில் நடந்துள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள பெர்ஹாம்பூர் அருகில் இருக்கும் கோபால்பூர் கடற்கரைக்கு 20 வயது கல்லூரி மாணவியும், ... மேலும் பார்க்க

ஆண் நண்பரை தாக்கி இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - தீர்ப்பைக் கேட்டு கதறி அழுத குற்றவாளிகள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், திருபுவனை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பணியை முடித்துவிட்டு, இ... மேலும் பார்க்க

நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு, ஏ.சி. போட்டு ஓய்வு எடுத்து... திருடிச்சென்ற திருடர்கள்! | உ.பி ஷாக்

திருட வருபவர்கள் சில நேரம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு செல்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு வீட்டில் திருட வந்த திருடர்கள் இரவு முழுக்க இருந்து சமை... மேலும் பார்க்க

கோவை: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிவிட்டு... அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!

கோவை, கோவைப்புதூர் பகுதியில் பால விநாயகர் கோயில் உள்ளது. அங்கு தினசரி பூஜை முடிந்தவுடன் கோயிலை பூட்டி செல்வது வழக்கம். அதன்படி கடந்த திங்கள் கிழமை இரவு கோயிலில் பூஜை முடிந்த பிறகு, வழக்கம் போல கோயிலை ... மேலும் பார்க்க

முத்திரைத்தாள் மோசடி: அதிமுக முன்னாள் MLA சாந்தி ராமு மீது 5 பிரிவுகளில் வழக்கு - என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி ராமு. படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தே.மு.தி.க-வில் இணைந்து கட்சி பதவிகளை வகித்து வந்தார். சாந்தி ராமுபல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்சியில் இர... மேலும் பார்க்க